விபிம் வெளியீட்டில் கவிஞர்.குறிஞ்சிவாணன் அவர்கள் 1967 முதல் 2009 வரை அச்சு ஊடகங்களில் எழுதி வெளியிட்ட கவிதைகளின் தொகுப்பாய் இந்த ""துயரம் சுமக்கும் தோழர்களாய்...'' நூல் வெளிவந்திருக்கின்றது.
கவிஞர் குறிஞ்சிவாணன் பற்றி ""கவிஞன்'' வாசகர்களுக்குக் கூற வேண்டிய அவசியம் இல்லை காரணம் கவிஞன் சிற்றிதழின் 5வது இதழின் ""இம்மாதப் பிரபலம்'' பகுதியை அலங்கரித்தவர் இவர்.
இனி துயரம் சுமக்கும் தோழர்களாய்... நூலின் பக்கங்களைப் புரட்டுவோம்..... கறுத்தப் பின்னணியில் அமைக்கப்பட்ட அட்டைப்படமே நூலின் தலைப்பைக்கூறுவது நூலுக்கு நிச்சயமாகவே வலுச்சேர்த்து நிற்கின்றது.
நூலைப் படிக்கும் முன்பே எழும் கேள்வி ''யார் அந்த துயரம் சுமக்கும் தோழர்கள்?"" என்பதுதான். நூலைப் படித்து முடித்ததும் நிச்சயமாக அதற்கான விடையை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
மொத்தம் 88 பக்கங்களில் 51 கவிதைகள் காணப்படும் இந்நூலில் அனேகமான கவிதைகள் தோட்டத் தொழிலாளர்களை மையப்படுத்தியே அமைந்திருக்கின்றன.
தோட்டத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வியல் பிரச்சினைகளைக் கூறும் ஒரு சித்தரிப்பாகக் கூட இதனைக் கருதலாம்.
அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய பிரச்சினைகளைக்கூட நகைச்சுவைத் பாணியில் கவிஞர் கையாண்டிருப்பது கவிஞரின் தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டு.
உதாரணமாக :
ஆறுமுகம் ஆசார சீலர்
அடுத்தவர்க்கு அறிவூட்டும் தோழர்
ஊரவரின் நகைகளினை
உடன் வாங்கி இருமடங்காய்
தேறவட்டி வாங்குமறி வாளர்
-------------------------
தாய்ச் சொல்லைத் தட்டாத- பிள்ளை
தப்பிலியாய் வளர்த்திடவு- மில்லை
கல்லூரி சென்று கற்று
கன்னியரின் நட்புக் கிட்ட
தாய்சொல்லோ அவனுக்கின்று
-தொல்லை
-------------------------
கவிஞரின் அனைத்துக் கவிதைகளுமே ஒரு சந்தத்தில் அமைந்திருப்பது கவிஞரைஇஅவரது கவிதைகளை வாசகரின் நெஞ்சில் நிறுத்தும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்க்கவிதை மரபுக்கு இப்படியூம் ஒரு புதிய இலக்கணம் சேர்க்குமாறு இன்னுமொரு கவிதையில் அறைகூவல் விடுக்கிறார் கவிஞர். கவிதை நூலில் பக்கம் 38 இல் ஓசி எனும் கவிதையைப் படித்தபின் முடிந்தால் முயலுங்கள்!
கவிஞரின் பாடுபொருளில் ஏலவே கவிதைகள் இருந்தாலும் கவிஞர் சொல்லும் விதமும்இ கையாண்டிருக்கின்ற
உவமைகளும் முற்றிலும் மாறுபட் டவையே.
பாடவந்த பொருளில் நாட்டம் மிகுதியால் சந்தத்தில் கோட்டைவிடும் கவிஞர்களுள் வெற்றி பெற்றிருக்கின்றார் கவிஞர் குறிஞ்சிவாணன்.
துயரம் சுமக்கும் தோழர்களாய் தொகுதியிலிருந்து நீங்கள் சிலாகிக்கச் சிலவரிகள்....
விழி சொல்லும் புதுமை
மௌ;ள நகைத்திடுவாள்! - என்னெஞ்சில்
மின்னலா ய+டிடுவாள்!
தொல்லை யகற்றிடுவாள்! - அவளிதழ்
தேனொத்த புன்னகையாள்!
..........
..........
மெல்லிடை மாது அன்னாள்-எனக்கென
இச்சகம் வந்து தித்தாள்!
சொல்லில் விளங்காக் கதை - அவள்விழி
சொல்லும் விதம் புதுமை!
மொத்தத்தில் கவிஞரது கவிதைகளும் பாரதி, பாரதிதாசன், உருத்திரமூர்த்தி, நீலாவணன்இ குறிஞ்சித் தென்னவன் கவிதை வரிசைகளில் தனக்கெனவும் ஒரு இடத்தைப் பிடிக்கும் என்பது வெள்ளிடைமலை.
தொடர்புகொள்ள....
கவிஞர்.குறிஞ்சிவாணன்
பிரதான வீதி
சாகாமம்
திருக்கோவில்
தொலைபேசி இல: 0779770281
ஆனந்தத்தில் ஓர் அனல் எனும் வித்தியாசமான புனைபெயரில் ஓவியர்; கவிஞர், ஆசிரியர் என பன்முக ஆற்றலை வெளிப்படுத்திச் சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் துடிப்புள்ள இளைஞனே விநாயகமூர்த்தி ஜீவராஜா.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பின் எல்லைக்கிராமமான துறைநீலாவணை எனும் அழகிய ஊரைப் பிறப்பிடமாகவும் தற்போது நாவிதன்வெளி - குடியிருப்பு முனை இல் வதித்து வருபவருமான இவர் விநாயகமூர்த்தி பரமேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகனாவார். பல் துறைகளில் இவரின் ஆற்றல் வெளிப்பட்டாலும் ஓவியம் மூலம் அனைவரின் மனங்களையும் கட்டிப் போடும் வல்லமை இவரின் கைகளுக்கும் தூரிகைக்கும் இறைவன் கொடுத்திருக்கும் வரம்.
இவருடன் உரையாடும் வாய்ப்பு கடந்த 22.12.2014 அன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ.பி.பாரதிராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கலைஞர் கொரவம் - 2014 எனும் நிகழ்வில் ஏற்பட்டது. பாரதிராஜா அவர்களிடமிருந்து கொரவம் பெற்ற மகிழ்வோடு எம்மிடம் மனம் திறந்து பேசினார் ஆனந்தத்தில் ஓர் அனல்…
ஆனந்தத்தில் ஓர் அனல் என்ற உங்கள் வித்தியாசமான புனைபெயர் பற்றிக் கூறமுடியுமா?
என்னைக் கவர்ந்த கவிஞர் மு.மேத்தா. அவரது கவிதைகள் எளிமையாகவும் இலகுவாகவும் புரிந்து கொள்ளக் கூடியவை. அவரது கவிதைத் தெகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது “சிரிப்பு ஒரு நெருப்பு” இக்கவிதை எனது வாழ்க்கையின் படிகளை யதார்த்தமாக உணர்த்துவது போன்றிருந்தது. ஆகவேதான் சிரிப்பு என்பதை ஆனந்தம் என்றும் நெருப்பு என்பதை அனல் என்றும் மாற்றி ஆக்கங்களை வெளியிடுகின்றேன்.
தற்போது கிழக்கிலே ஒரு சிறந்த ஓவியக் கலைஞராக திகளும் தங்களது இளமைக்காலம் பற்றிக் கூற முடியுமா?
வறுமையுடன் பிறந்த என் இளமைக்கல்வி மிகவும் சவாலானது. துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் 1993 இல் ஆரம்பமான எனது கல்வி அக்கரைப்பற்று விபுலாநந்தா சிறுவர் இல்லத்தில் இணைந்த பின் மாற்றம் பெற்றது. அதன் பின் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் உயர்கல்வியைக் கற்று 2005 இல் சித்திரப்பாடத் துறையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்று 2009 இல் நிறைவு செய்தேன்
இக் காலப்பகுதியில் தான் எனது கவிதைகளும் அதிகம் பிரசவமானது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண யுத்த நிலைமைகளால் உணர்வு ரீதியாகவும் உளரிதியாகவும் இன்னும் கூறப்போனால் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டேன். அக்காலத்தில் ஏற்பட்ட எனது வலிகளை உணர்வுகளை ஓவியங்கள் வாயிலாகவும் கவிதை வாயிலாகவும் வெளிப்படுத்தத் தொடங்கினேன். அது அக்காலத்தில் எனக்குப் பல இரசிகர்களைப் பெற்றுத்தந்தது. உணர்வால் வரையப்பட்டவை என்பதால் இரசிகர்களின் கவனத்தை ஈர்திருந்ததை அவர்களின் பின்னூட்டல் வாயிலாக என்னால் அறிய முடிந்தது. நாட்டின் யுத்தத்தின் வலிகளை வெளிப்படுத்த நான் அவற்றைப் பயன்படுத்தியது தற்போது ஓரளவு ஆறுதலைத் தருகின்றது.
பல்கலைக்கழகத்திற்குப் பின்னான உங்கள் வாழ்வுபற்றிச் சற்றுக் கூறமுடியுமா?
2010 இல் திருக்கோணமலையில் கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் சமூக இணைப்பிற்கான ஆய்வு உதவியாளராக பதவியேற்ற நான் சமாதானமும் விழுமியமும் எனும் தொனிப் பொருளுக்கமைவாக மூவின மாணவர்களையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டேன். பின்னர் நாவிதன்வெளிப் பிரதேச செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமை புரிந்த எனக்கு 2014 இல் போட்டிப் பரீட்சை மூலம் காலி திவித்துறை மகாவித்தியாலயத்தில் கிடைத்த சித்திரப் பாடத்துறை நியமனம் ஆத்ம திருப்தியைத் தந்தது.
நீங்கள் இத்துறைக்குள் கால்பதிக்கக் காரணமானவர்கள்யாவர்?
எனது ஆரம்ப குரு எனது தந்தை ஆரம்ப காலத்தில் பாடல்களின் ஊடாகவே ஓவியத் துறைக்குள் ஈர்க்கப்பட்ட நான் முதல் வரைந்த ஓவியம் புத்த பகவான். புத்த பகவானின் ஓவியத்தின் கை முத்திரைகள் அழகாக இருப்பதைக் கண்ட அனைவரும் எனக்குள் ஓவியத்துறை உள்ளதை பாராட்டியதுடன் நானும் உணர்ந்து கொண்டேன். அதன் பின் திருக்கோயில் வலயத்தில் சித்திரப் பாடத்துறை உதவிப் பணிப்பாளராக இப்போது பதவி வகிக்கும் திரு.சு சிறிதரன் அவர்கள் எனக்குள் இருந்த ஆற்றலை வெளிப்படுத்த உதவி புரிந்தார். ஆரம்பத்தில் சிறிய பதாதைகளை நான் எழுதும் போது சில நுனுக்கங்களைக் கற்றுககொடுத்த அவர் விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் தற்போதும் உள்ள பகவற்கீதைக் காட்சியை அவருடன் இணைந்து வரையும் சந்தர்ப்பதை தந்து என்னை ஊக்கப்படுத்தினார் அதே வேளை இல்லத்தின் தலைவரும் இறைபணிச் செம்மலுமான திரு.த. கயிலாயப்பிள்ளை அவர்கள் ஸ்கிறீன் பெயின்ரிங் எனச் சொல்லப்படும் பயிற்சிக்கு என்னை அனுப்பி வைத்தார் அப் பயிற்சி நெறி என்னை மேலும் வழப்படுத்தியதுடன் இன்றும் உதவி புரிகின்றது.
உங்களது ஓவிய வெளிப்பாடுகளை எங்கு காணலாம் ?
கிழக்கு மாகாணத்தில் இதுவரை 25 இற்கும் மேற்பட் பாடசாலைகளில் சுவர்களை எனது ஓவியங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அதே போன்று பல ஆலயங்களிலும் எனது ஓவியங்களை நீங்கள் காணலாம்.
கலைஞர் கௌரவத்தில் ஓவியத்துக்கான கௌரவத்தைப் பெற்ற சந்தர்ப்பத்தில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பத்மஸ்ரீ.பெ.பாரதிராஜா அவர்களின் உருவப்படத்தை வரைந்து அவருக்கு வழங்கியபோது அவரின் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் மல்கியதை நாங்கள் அவதானித்தோம் இதுவே ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் உயரிய கௌரவமும் மகிழ்ச்சியும் ஆகும். இதேபோன்று வேறு ஏதாவது மறக்கமுடியாத சந்தர்ப்பங்கள் உண்டா?
துறைநீலாவணை உச்சிமாகாளியம்மன் ஆலயத்தில் 7 x 14 அடித் தகரத்தில் வரைந்த அம்மனின் ஓவித்தை முகப்புத்தகத்தில் பதிவு செய்தபோது இந்தியாவின் தலைசிறந்த ஓவியரும் விரிவுரையாளருமான இராஜராஜன் அவர்களின் பாராட்டைப் பெற்றது மன மகிழ்ச்சியை ஏற்படுத்திய சந்தர்ப்பம் எனலாம்.
உங்களது ஆக்கங்கள் இதுவரை எந்தெந்த ஊடகங்களில் வெளிவந்துள்ளன?
வீரகேசரி வாரப்பத்திரிகை , தினகரன், தினமுரசு, மித்திரன் ஆகியவற்றில் எனது 50 இற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்ததுடன் தினக்குரல் சினிகுரல் பகுதியில் மற்றும் கவிஞன் சிற்றிதழின் 24 ஆம் இதழின் அட்டையிலும் எனது ஓவியங்கள் வெளியாகி உள்ளன.
இறுதியாக உங்கள் எதிர்கால இலட்சியம் பற்றிக் கூறுங்கள்?
எதிர்கால இலட்சியங்கள் அதிகமாகவே உள்ளன. எனினும் வுhய்பின்மையும் குடும்பச் சூழலும் முட்டுககட்டையாகத் திகழ்கின்றன அதற்கான அனுசரணை வழங்க யாராவது முன்னருவார்களானால் ஓவியத் துறையில் தேசிய ரீதியாக மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் நாட்டிற்றுப் பெருமைசேர்க்கத் தயாராக உள்ளேன்.
நேர்காணல் : சதாசிவம் மதன்
இந்தக் கலைஞனை நீங்களும் நேரடியாகப் பாராட்ட விரும்பினால்
தொலைபேசி எண் :+94754310479, +94771530122
இவரின் ஆக்கங்கள் சில.....
அது ஒரு இருண்ட சாலை. ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்ததாலும்இ இரவு 11 மணியைத் தாண்டியிருந்ததாலும் எங்குமே மயாண அமைதியே நிலவிக்கொண்டிருந்தது. “விரைவாக விரைவாக” என்ற நண்பனின் குரலைத்தவிர ஏனைய ஓசைகள் அனைத்துமே எங்கேயோ ஒழிந்து கொண்டன. குருதி வடிந்த நண்பன் குணாளனை ஏற்றியபடியே சாலையின் முடிவை தொட்டுவிடும் வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது கோகுலனின் கார்.
அவனால் நம்பமுடியாத வேகத்தில் கார் விரைந்துகொண்டிருந்தாலும் அதையும் முந்தும் வேகத்தில் ‘என்ன சேர் நீங்க! இப்படிப் பண்ணிட்டீங்க?’ என்ற கிருஷாந்தினியின் வார்த்தைகள் அவனது காதில் பயணித்துக் கொண்டுதான் இருந்தன.
கோகுலன் ஒரு எழுத்தாளன் அவன் போகுமிடமெங்கும் அவனைச் சுற்றும் கூட்டமே தன் எழுத்துக்களுக்குக் கிடைக்கும் வெற்றியாக அவன் நினைப்பதில் என்ன தவறிருக்கின்றது? குணாளனும் கிருஷாந்தினியும் கோகுலனின் விசிறியாய் இருந்து நண்பர்களானதை எவ்வாறு மறுக்க முடியாதோஇ நண்பர்களாயிருந்து காதலாராகியதும் அவ்வாறே!
சாலையில் கண்ணும் கிருஷாந்தியில் வார்த்தைகளில் மனதும் சிக்கிக் கொண்டதால்இ சாலையின் ஓரம் வளர்ந்திருந்த ஆலைமரம் கார் முன்னே பிரசன்னமானதை கோகுலனால் உணர முடியவில்லை. சடுதியாக பிறேக் போட முயன்றும் அதில் தேற்றுப் போனான். காரின் கதவு வழி திறந்து அவனை சாலையில் வீழ்த்தியது. நள்ளிரவு 12 மணிக்கு சாலை ஓரத்தில் தன்னந்தனிமையில் உணர்வற்றுக் கிடந்த கோகுலனை அவனது கைத்தொலைபேசிதான் எழுப்பியது. அழைப்பது யார் எனப் பார்க்க முயன்ற போதுதான்இ நள்ளிரவு 12 மணிக்கும் மாலை 4.30 இற்கும் இடையான தொடர்பற்ற இடைவெளியை, அவன் மதியச் சாப்பாடு உன்டுவிட்டு தூங்குவதற்கு முன் கைத்தொலைபேசியில் வைத்துக் கொண்ட 4.30 மணி அலாரம் சீர்படுத்தியது.
அவசர அவசரமாக எழும்பி A/L வகுப்பிற்குப் போவதற்கு தயாராகும் வேளையிலும் யார் அந்தக் குணாளன்? யார் அந்தக் கிருஷாந்தினி? நான் அப்படி என்ன செய்தேன்? என்ற வினா அவனுக்கு வினாவாகவே சில மணிநேரம் தொடர்ந்தது.
'ஹாய் தருண் நீண்ட நாளைக்குப் பிறகு... என்ன இந்தப் பக்கம்? ' 'ஒரு வேலையா வந்தன் மது ஆனா அது முடியல்ல அதுதான் திரும்பிட்டன் ' 'அது சரி நீ என்ன இந்தப் பக்கம்?' 'அது நான் கேட்க வேண்டிய கேள்வி... என் வீடு இங்கதானே! வாயேன் வீட்ட ஒரு கப் ரீ குடிச்சிற்றுப் போகலாம்...'
என மதுவுக்கும் தருணுக்குமிடையான உரையாடல் தெருவழியே வீடுவரை உருண்டோடியது. மதுவும் தருணும் ஒரே அலுவலகத்தில் தொழில்புரியும் 30 பேர்களில் இருவர்.
'அது தான் எனது மாளிகை' என தனது இயல்பான புன்னகையுடன் இயம்பினாள் மது.
'வலது காலை எடுத்து வைத்து வரவா? ' என தனது குறும்புப் பதிலை கேள்வியாகவே கூறி உள்நுழைந்த தருணுக்கு மது தனது பெற்றோரை அறிமுகப்படுத்தினாள்.
முற்றாய் முடிநரைத்த அம்மா, ஆங்காங்கே நரைத்து அழகான அலங்காரமிட்ட சிகையுடன் சிரித்துப் பேசும் அப்பா. அமைதியான அம்மாவுக்கு அரசியல் ஆர்வமுடன் கணவன் கிடைத்திருப்பது காதலால் அல்ல பேசிமுடித்ததுதான். ஒரு அண்ணா அரசஊளியர், திருமணமே வேண்டாமென விரத்தியடைந்த ஒரு அக்கா இவற்றில் கடைக்குட்டியாய் இருபத்தியாறைத் தாண்டிக்கொண்டிருக்கும் நான் என தனது குடும்ப சரிதத்தை சொல்லிமுடித்து பெருமூச்சிவ pட்டாள் மது. அன்றைய தினம் அண்ணா வேலை விடயமாய் கொழும்புக்கும் அக்கா வெளியேயும் சென்றிருந்ததால் வீடு அமைதியாகவே இருந்தது.மூ.மே தாவின் புத்தகங்களை மேசையில் பார்த்த பிறகுதான் மதுவுக்கும் கவிதையில் ஆர்வமிருப்பதை அறிந்துகொண்டான் தருண். வாசிக்க ஆரம்பிக்கும் முன்பே
'வாங்க மகன், மகளோடு வேலைசெய்றீங்களா? எப்படி சுகம்? ' என ஆரம்பித்து இலங்கைப் பொருளாதாரம் வளியாக அரசியலுக்குள் நுழைந்தார் மதுவின் அப்பா.ஓய்வு பெற்ற அரச ஊளியர் என்பதால் அரசியலை இலாபகமாக அறிந்திருந்தார். ஆனால் தருணுக்கும் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தமென்பதை அங்கு தருணைத் தவிர யாருமே அறிந்திருக்கவில்லை. இதற்கிடையில் 'ரீ எடுங்க தருண் ' என ட்றேயை நீட்டினாள் மது. சூடுடன் அருந்தும் பழக்கமில்லாததால் எடுத்து மீண்டும் மேசையில் வைத்து மதுவின் அப்பாவுடன் அரசியல் மேடையில் மீண்டும் இணைய ஆரம்பிக்கும் போது... 'இங்க கொஞ்சம் வாங்களன்' என சமயலறையிலிருந்து வந்த குரலுக்கு மதிப்பளித்தவராய் எழுந்து சென்றார் அப்பா.
'பிறகு சொல்லுங்க தருண் லைவ் எல்லாம் எப்படிப் போகுது? அப்பா இப்படித்தான் ஏதாவது அலட்டிக்கொண்டிருப்பார். என பேச்சைத் தொடங்கினாள் மது. நீங்கதான் சொல்லணும் என பதிலை கேள்வியாகவே திருப்பினான் தருண்.
'எதைச் சொல்ல... என் மௌனப் பேச்சுவார்த்தைகளைச் சொல்லவா? இல்லை முடியவைக்க முடியாத என் நீண்ட இரவுகளைச்சொல்லவா? ' எனக் கூறும்போதே மதுவின் கண்கள் சற்றுக் கலங்கியதை தருண் கவனிக்காமலில்லை.
'என்ன மது ஏதும் பிரச்சினையா? என்னிடம் சொல்லமுடியாதா?' என சோகங்கலந்த ஆவலுடன் கேள்வி தொடுத்த தருணக்கு ' இப்ப முடியாது தருண் பிறகு போணில எல்லாம் விளக்கமாய் சொல்லுறன்' என்ற மதுவின் பதில்; தருணுக்கு இன்னும் ஆர்வத்தைக கூட்டியது. அதன்போது மீண்டும் சங்கமித்த மதுவின் அப்பா ' ரீ யைக் குடிங்க மகன் ஆறிடும்' என்பதற்குப் பின்தான் ரீ பற்றிய நினைவு வர ஆறிய ரீயை ஆறாததுபோல் வைத்து வைத்துக் குடித்தான் தருண். விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதது போல். குடித்து முடிந்ததும்
'சரி அங்கிள் நான் பொயிற்று வாறன்' என எழுந்த தருணை ' சமச்சி முடிச்சிட்டன் சாப்பிட்டுத்துப் போகலாம் இருங்க மகன் என மதுவின் அம்மாவின் குரல் தடுக்க முயன்றது. ' இல்ல நான் பிறகொரு நாளைக்கு வாறன் அம்மா என விடைபெற்று தருண் புறப்பட்டான்.
மோட்டார் சைக்கிளின் சத்தத்துடனே மதுவின் பிரச்சினைகளும் ஒட்டியே அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தது.
மாலைவேளை தருணின் கைத்தொலைபேசி சிணுங்கியது அவன் எதிர்பார்த்திருந்த மதுவின் அழைப்பென்பதால் கவலை கலந்த ஆவல் அதிகரித்தது. கல்லூரிக் காலத்தில் மதுவைப் பலர் காதலித்தாலும் மது ஒரு திடமான முடிவெடுப்பளள் என்பதால் அப்போது அவற்றுக்கு வாய்ப்பளிக்கவில்லை இருந்தும் சுமன் அதைப் புரிந்து கொள்ளாமல் பிரியாவிடை நாள் வரையும் மதுவை ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்ததையும் தருண் அறியாமலில்லை. ஏன் இப்போது கூட சுமன் மதுவையே நினைத்துக் கொண்டிருப்பதை எத்தனையோ தடைவ சுமன் தருணிடம் கூறியிருக்கிறான். இவை அனைத்தும் இழைப்பைத் தொடர்வதற்கிடையில் தருணின் மனத்திரையில் ஒளிபரப்பாகி முடிந்த நிழற்படங்கள்.
'ஹலோ... சொலலுங்க மது' என ஆரம்பித்தான் தருண். ' எப்படி இருக்கீங்க விட்டில எல்லோரும் சுகமா?' என மது பதில் மொழிய... ' அது இருக்கட்டும் என்ன பிரச்சினை என்று சொல்லுங்க' எனத் தொடர்ந்தான் தருண்.
' தருண் நான் ஒருத்தர லவ் பண்றன் தெரியுமா?
' நீங்களா நம்பவே முடியல... '
'அது சரி என்ன பிரச்சன ஏன் வீட்டில விருப்பமில்லையா?
'அப்படியில்ல.........' என இழுத்த மதுவை ' அப்ப வேற என்ன பிரச்சினை என தொடரவைத்தான் தருண்.
'நான் கல்லூரி காலத்தில இருந்தே லவ் பண்றன் ஆனா இப்ப அவர் என்னிடம் கதைக்கிறதே இல்ல நீண்ட நாளைக்குப் பிறகு இண்டைக்குத்தான் கதைச்சன் அதுவும் சொஞ்ச நேரம்தான் சரியாகவே கதைக்க முடியல்ல அவருக்கு என்ன பிரச்சினையோ தெரியல்ல ஆனா எனக்குத் தெரியும் அவர் வேற ஒருத்தரையும் லவ் பண்ணையுமில்லை பண்ணவும் மாட்டாருண்ணு' எனத் தொடர்ந்த மதுவை, 'அது சரி அந்த அவரு யாரெண்டு இன்னும் சொல்லவே இல்லையே, யாரு சுமன்தானே?' என நகைச்சுவையாகக் கூறி மீண்டும் தனது வட்டத்திற்குள் கொண்டுவந்தான் தருண்.
'சீ... உனக்கென்ன பைத்தியமா?'
'அப்படியெண்டா வேற யாரு?'
'அவர உங்களுக்கும் தெரியும்' என வெட்கப்பட்டவளாகவே பதில் கூறினாள் மது.
'யார் அந்த அதிஸ்டசாலி எனக்குத் தெரிந்தவரா?' என அறிய ஆவலோடு விசாரித்தான் தருண்.
'சொல்றன் ஆனா ஒருத்தர்கிட்டையும் சொல்லக்கூடாது' என நிபந்தனைகளுடன் மது கூறிய பெயரைக் கேட்டதும் சந்தோசத்தைவிட அதிர்ச்சியும் ஆச்சரியமும் மேலோங்கியதில் தருணுக்கு என்ன கதைப்பதென்றே ஒரு கணம் தெரியாமல்போனது.
எனினும் தருண் தனது காலச்சக்கரத்தை ஒரு வருடம் முன்னோக்கிச் சுழற்றியவனாய் மௌனமாகவே இருந்தான்.
'நரேன் என்னடா ஒரே கவலையா இருக்கா, இதுக்கு முன் நான் உன்ன இப்படி ஒருநாளும் பார்க்கவே இல்லையே! என்ன ஏதும் பிரச்சனையா?' என்றவாறே வீட்டினுள் கவலையுடன் உட்காந்திருந்த நரேனை நெருங்கினான் தருண். இருவருமே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். நரேன் மினவும் அமைதியானவன். சந்தோசங்களைமட்டுமே பகிர்ந்து கொள்ளும் சுபாவமுடையவன். துக்கங்களை தனக்குள்ளேயே குழிதோண்டிப் புதைத்துவிடுவான்.
'ஆமாண்டா தருண் நான் லவ் பண்ர விசயம் உனக்குத் தெரியும் தானே!'
'ஓ... அதற்கென்ன, நீதான் உன்ட தேவதைய யாரெண்டு சொல்லமாட்டன் தெரியும் போது தெரியும் என்று ஒத்தக்காலில நிக்கிறியே! பிறகும் பிறகும் யாரெண்டு கேட்க நானென்ன இவனா' என சலிப்புடன் கூறிய தருண் மீண்டும் தொடர்ந்தான்.
'இப்ப என்னடா பிரச்சினை அதையாவது சொல்லு'
'நான் லவ் பண்ற விசயம் எங்க வீட்டில தெரிஞ்சி பொயிட்டுடா! எனக்கு சப்போட்டா எங்க குடும்பத்தில இருந்த ஒரே ஒரு ஆளெண்டா எங்க அம்மாதாண்டா! அம்மா இறந்த பிறகு ....' எனக் கூறி முடிக்க முடியாதவனை அழுகை அரவணைத்துக் கொண்டது.
' ஏன்டா நரேன் அழுறா மரணமில்லாத வீடுகள் இந்த உலகத்தில் எங்கேயாவது இருக்கா சொல்லு? நீயே இப்படி அழலாமா சொல்லு!'
'அது இல்லடா தருண். நான் லவ் பண்ரது வீட்டில அக்கா அவங்களுக்குப் பிடிக்கல்லடா! எனக்கு யாருமே இல்லண்டு நினைக்கயில என்னால அழாம இருக்கமுடியலடா!' என்ற நரேனை , ஏன் நாங்களெல்லாம் உனக்கில்லையா என்ற தருணின் வார்த்தைகள் ஓரளவு திடப்படுத்தின.
'ஆரம்பத்தில எல்லா வீட்டிலையும் இப்படித்தான் நரேன், போகப்போக சரியாகிடும். உங்க அண்ணா இருக்காருதானே! அவரும் லவ் பண்ணித்தானே திருமணம் செய்தவர் அதனால உனக்கு சப்போட் பண்ணுவார்தானேடா! ஏன் கவலப்படுறா'
அப்படித்தான் தருண் நானும் இவ்வளவு நாளா நினச்சிட்டிருந்தன். ஆனா அது ஒன்றுமே நடக்கல்லடா! அவரும் எனக்கு சப்போட்டில்லடா!' என்ற நரேனின் பதில் தருணையே சற்று கவலையடையச் செய்யத் தவறவில்லை.
'அதுதான் என்ன முடிவெடுக்கிற என்று ஒண்ணுமே தெரியல்லடா! அவக்கிட்டயும் நான் சரியா பேசமுடியல்லடா! இப்ப நானொரு குடும்பச் சிறையின் கைதிடா தருண்' என்று தனது சோகங்களைக் கூறியாலும் எதிர்காலம் கருதியோ என்னவோ தனது காதலி யார் என்பதை ஒரு விடுகதையாகவே பேணிவந்தான் நரேன்.
'இப்ப முடிவா உங்க அக்கா அண்ணா எல்லாரும் என்னதாண்டா சொல்லுறாங்க' என நரேனின் குடும்பத்துடன் வெறுப்புணர்வு கொண்டவனாய் வினவினான் தருண்.
' அவ வேலை செய்யிறது எங்க குடும்பத்திற்கு பிடிக்கல்லடா. வேலைய விடோனுமாம்!
' இது தானா உன்ர பிரச்சின அவ வேலையை விட்டா சரிதானே பிறகென்ன பிரச்சின?'
'இத எப்படிடா நான் அவளிட்ட சொல்லமுடியும் அந்த வேல அவளுக்கு உயிர், அவ வேலசெய்யிறது தெரிஞ்சிதானேடா நான் லவ்பண்ணினன் அது மட்டுமில்லடா தருண் வீட்ட சீதனமும் எதிர்பாக்கிறாங்கடா'
'என்ன சீதனமா? என்னடா சொல்றா, நீங்க காதலிக்கிறது திருமணமெண்டு வந்தா சீதனம் கேக்கிறது என்னடா நினச்சிருக்கீங்க.. போடா.....' என சலித்துக் கொண்டவனாய்நரேனுடன் கோபமாய்ப் புறப்பட்ட தருணை ' எனக்கும் தெரியுமடா இதெல்லாம் எனக்கும் விருப்பமில்லதான் ஆனா அக்கா அண்ணாவோட சொல்லையும் மீறேலாத நிலமயில இருக்கண்டா! இதனாலதான் அவயோடயும் சரியா பேசுறதே இல்லடா!'
'மகளுக்கு சீதனம் கொடுக்க அவங்கட அப்பா விரும்பினாலும் வாங்க எனக்கும் விருப்பமில்ல வேலையை விடச்சொல்லவும் முடியாதுடா! இன்னும் நிறைய பிரச்சன, இதெல்லாம் வச்சித்தாண்டா நான் அவளுக்கு ஃபோனே எடுக்கிறல்ல. என்ன பிழையா நினைக்கிறாளோ தெரியல்ல' என்ற நரேனின் பரிதாபமான வார்த்தைகள்தருணின் கோபத்தை தணிய வைத்தது. எனினும் நரேன் அவளையே நினைத்துக் கொண்டிருப்பதை தருணால் உணரமுடிந்தது. நரேனின் காதல் எப்படியாயினும் திருமணத்தில்தான் முடியவேண்டும் என மனதில் நினைத்தவனாய்...
'சரிடா எல்லாம் சரிவரும் நீ இருந்து பாரேன்' என விடைபெற்ற அந்த நாட்கள் பற்றிய நினைவுகளை................. 'என்ன தருண் சத்தத்தையே காணல்ல' என்ற மதுவின் வார்த்தைகள் தான் தருணை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தன.
'ஹலோ... ஹலோ......... எனப் பலமுறை கூறியும் மதுவிடமிருந்து பதில் வரவில்லை. அப்போது தருணின் ஃபோண் வெற்றி தீர்ந்து மூர்ச்சையாகியிருந்தததை அவன் அறிந்திருக்கவில்லை.
மது , நரேன் ஆகியோரின் மௌன உரையாடல்களை புரிந்து கொண்டவனாய், நரேனுக்கு அழைப்பை ஏற்படுத்த முயன்றவனுக்கு 'இவ்வழைப்பைப் பூர்த்தி செய்ய உங்கள் கணக்கில் மீதி போதாதுள்ளது' என்ற இலத்திரன் குயிலின் குரல் ஏமாற்றத்தையே கொடுத்தது. ஃபோனை வைத்து விட்டுத் திரும்பிய தருணுக்கு ' எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்' என்ற கீதாசார வார்த்தைகள் சற்றுத் தடிப்பாகவே தெரிந்தது. இருந்தும் உண்மைக்காதல் உறங்காதென்பதை மது,நரேன் இவர்களுடன் தருணும் உணராமலில்லை.