கொஞ்சம் பொறுங்கள்....
எனக்காக ஒன்றும் அழத்தேவையில்லையென்று
அவர்களிடம் சொல்லுங்கள்
ஏனென்றால் இப்போது என்னால்
அவர்களின் கண்ணீரைத் துடைக்க முடியாது
எனது வார்த்தைகளின் அதிர்வெண்களும்
அவர்களின் கேள்தகவும்
சந்திக்க மறுக்கின்றன.
முடியாதென்று தெரிந்தும்
அவர்களின் கண்ணீரின் ஊற்றுக்களை
கட்டுப்படுத்தவே முற்படுகின்றேன்.
எனக்காக இத்தனை கண்களில் ஈரலிப்பா?
இல்லை இல்லை இருக்கவே முடியாது!
அதில் கொஞ்சம்
கானல் நீரும் கலுந்துள்ளதை
நான் மட்டுமே அறிகிறேன்.
இப்போது எனது உலகமே வேறு
இங்கு கவிதைகளுக்கு மதிப்பில்லை
ஆனாலும் நான் மதிப்பவர்கள்
இங்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்
எனது பாட்டன்மார், எனது பாட்டிமார்
அப்துல் கலாம், பிரபாகரன்
பாரதி, வைரமுத்து , வாலி .....
என இன்னும் பலர்....
மதனை இப்போது
என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்
அவன் கண்களையும் இதயத்தையும் தவிர
மற்ற அனைத்தையும்
அக்கினிக்கு அகுதியாக்குங்கள்
அல்லது பூமிக்குப் புசிக்கக் கொடுங்கள்
ஏனென்றால்... அவையிரண்டும்
இன்னுமிருவருக்குச் சொந்தமாக
இத்தனை வருடங்கள்
காத்துக் கிடந்தவை.
அவர்களிடம்
அவற்றைச் சீக்கிரம் சேர்த்துவிடுங்கள்
அவர்களது கண்ணீரையாவது
இப்போது என்னால் துடைக்க முடியும்
அதற்குக் கைகள் தேவையில்லை
எனது கண்களே போதும்
நீங்கள் அழத் தேவையில்லை...
நான் அழியப்போவதுமில்லை.
அன்பின் நண்ப ஜனா... நலமே வாழ்க
அன்டறொரு நாள்
புத்தி புரியா காலங்களில்
ஒட்டிக் கொண்டது நம் உறவு
ஓசை இல்லாத பாசிக்குடாவாய் நீயும்
மௌனம் மறந்த மார்க்கெட்டாய் நானும்
மனங்களை மாற்றிக் கொண்டதை
எப்போது நினைக்கையிலும்
எட்டாவது அதிசயந்தான்
டா' என்று உரிமை எடுக்க
முட்கம்பி வேலி போட்டு
முன்னுக்கு உட்காந்திருந்தது
உன் மாமியின் டாக்டர் பட்டம்
அது எமது முதல் ஜென்மம்
இப்போதும் ஒட்டிக் கொண்டே
தொடர்கிறது....
திருமணத்திற்கும் நட்புக்கும்
பெரிய வித்தியாசமில்லை
திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது
நட்பு
நிச்சயிக்கப்படும் இடம்
சொர்க்கமாகின்றது
அப்போதெல்லாம்
நீ
பிறருடன் நெருங்கிப் பழகினால்
என் நெஞ்சுக்கு வலிக்கும்
இப்போது முடியாது
அந்த உரிமையை
உன் மனைவிக்கு மாற்றியிருப்பாய்.
ஆனாலும்
சட்டியோடு ஒட்டிய
மீன்குழம்பாய்
இப்போதும் என்னுள்
ஒட்டிக் கொண்டே இருக்கிறது.
உனக்கும் அப்படியா?
நாம்
துள்ளித்திரிந்த
பள்ளிக் காலத்தை நினைத்தால்
காய்ந்த
சுள்ளிக் குச்சியிலும்
துளிர் தெரியும்
அவற்றை அள்ளி எடுத்து
அசைபோட்டுப் பார்க்கையில்
மனசுக்குள்
ஏஆர் றகுமானின் -மெல்
இசை கேட்கும்
உனக்கும் அப்படியா?
தரம் ஐந்து அப்போது அது
வகுப்பு ஐந்தென்றிருந்தது
இப்போது அது
மறக்க முடியாத மந்திர வார்த்தை
அது ஒரு ராஜ்யம்
குலேந்திரராசா அதன் ராஜா
'99 புள்ளி எடுத்தால் ஒரு அடி'
இது தான்
அந்த ராஜ்யத்தின் இராஜ வாக்கியம்
பூச்சிம் எடுத்தவன் கதி....
தண்டனை நிறைவேற்ற
எத்தனை பிரம்புகள் தவம் கிடக்கும்
உன் மோதிரம் நெளித்த
பிரம்புக் குச்சியை
நான்
முறைத்துப் பார்த்ததை
உன்னால் உணர முடிந்ததா?
அப்போது ரணமான நிகழ்வுகள் எல்லாம்
இப்போது ரசனையான நினைவுகளாய்
எப்படி மாறின?
ஆழ்பவன் ஒரு நாள் வீழ்வான்
என்பதை நம் உறவிலும்
நிரூபித்துக் காட்டியது 'முருகன்' சண்டை
ஆனால்....
முள்ளிவாய்க்காலில் மட்டும்;
எப்படி அது பொய்யானது?
சீச்சி மெய்தாய்
ஆப்போது ஆண்டவன் 'அண்ணன்' அல்லவா?
மீண்டும் வருவான்
நம் நட்புப் போல.....
அதெப்படி
நம் நட்பை எழுத மட்டும்
என் பேனாவுக்கு
இறக்கை முளைத்தது?
துரப்பிடித்திருந்த அதன் முனை
துலங்கியதெப்படி?
மரணம்
உன் தாத்தாவை மட்டுமல்ல
உன்னிடமிருந்து பிரித்தது
நம் நட்பையும் தான்.
அதன்பின் நம் நட்பென்ற முழுநிலவு
மூன்றாம் பிறையானது
பின் முழுதாய் மறைந்தது.
கிரகணத்தில் நிலவைக் கவ்விய பாம்பாய்
நம் உறவைக் கவ்வியது சிவானந்தா
என்றாலும்
காலம் விசித்திரமானது
சிவானந்தாவை எனக்கும் நண்பனாக்கியது
எனது 9ஏ ஓ.எல் முடிவு
சிவானந்தா நம் நட்பை விழுங்கினாலும்
அதனால் அதை ஜீரணிக்க முடியாததை
உன் திருமணத்தில் நிரூபித்தது
யுவனின் வரவு...
அவன் நமக்குத் தெரியாமலே
நமக்கு நண்பனாய் இருந்திருக்கிறான்
உனக்கும் எனக்குமாய்....
நீண்ட இடைவெளிக்குப் பின்
குறிஞ்சி பூத்தாற் போல்
12 வருடங்களுக்குப் பின்
மீண்டும் பூத்திருக்கிறது நம் நட்பு
அது தொடர....
குறிஞ்சியை
காகிதத்தில் செய்ய விரும்பவில்லை
அதற்கு மணமிருக்காது....
அதைக் களவாடும்
களைகளை கத்தரிக்க நினைக்கிறேன்
காயப்படுத்தும்
காற்றைக் கட்டி வைக்கப் பாக்கிறேன்
என் கல்லறை மட்டும்
அதன் மணம் பரவ....
அந்தப் 12 வருடங்கள்
பாழாய்ப் போனதாய் ஓர் உனர்வு
உன்னாலும் உணர ஒண்ணுதா?
உண்மையைச் சொல்கிறேன்
12 வருடங்களில் உன்னை
பல தடைவ நினைக்க வில்லை...
ஆனாலும் சில தடவைகள்
பலமாக நினைத்திருக்கிறேன்....
ஆம்...
உனக்குப் புரையேறிய
அந்த நிமிடங்களில் தான்....
அதிலும் பல தடவைகள்
ரத்தம் உறையும்
யுத்தச் செய்தியின் போது....
அப்போது உனக்கு
என்னை நினைக்க நேரம் இருந்திருக்காது
நீ..
தமிழனையும் தமிழையும் அல்லவா
நினைத்திருப்பாய்...
நட்பைப் பேசும் இடங்களில் எல்லாம்
என் நண்பர் கூட்டத்தில்
உன்னைப் பற்றிய கதை
முந்திக் கொள்வது
என்னைப் போன்றே
என் நண்பர்களுக்கும்
என்னில் எரிச்சலை ஊட்டியிருக்கும்
என்ன செய்வது?
அதைத் தடுக்'க முடியாது...
மீண்டும் தொடர்பு
மிக்க மகிழ்ச்சி
பாவம் பக்கத்தில் நின்றவர்கள்
நம் 12 வருட
நினைவுகளை
அவர்களுடன் அல்லவா மீட்டியிருந்தேன்
அப்படி ஒரு மகிழ்ச்சி
உனக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்
வர்ணிக்க வார்த்தையில்லாமல்
தவித்திருப்பாய்
வானத்தை எட்டிப் பிடித்ததாய்
உணர்ந்திருப்பாய்
இன்ப வலியை
இருதயம் அனுபவித்திருக்கும்
சொல்ல முடியாத ஏதோ ஒன்றால்
அவஸ்த்தைப் பட்டிருப்பாய்
அந்த அவஸ்த்தை
ஆனந்த எல்லையை உடைத்திருக்கும்
ஏனென்றால்
எனக்கும் அப்படித்தான் இருந்தது.
'பிரம்மன்'
உன்னோடு இல்லா விட்டாலும்
உன் நினைவுகளோடு
நான் பார்த்த முதல் திரைப்படம்
இக் கவிதை
முதல் மூச்சு விட
முட்டி மோதிய கருவறை
என்றாலும்
இப்போது நினைக்கையில்
உன்னிடம் உரிமைக் கோபத்தில்
ஒரு கேள்வி....
மட்டக்களப்பில்
உன் 1 வருட
அஞ்ஞாத வாசத்தில்
புதுக்குடியிருப்புமா உனக்குப்
புது – குடியிருப்பு?
அன்டறொரு நாள்
புத்தி புரியா காலங்களில்
ஒட்டிக் கொண்டது நம் உறவு
ஓசை இல்லாத பாசிக்குடாவாய் நீயும்
மௌனம் மறந்த மார்க்கெட்டாய் நானும்
மனங்களை மாற்றிக் கொண்டதை
எப்போது நினைக்கையிலும்
எட்டாவது அதிசயந்தான்
டா' என்று உரிமை எடுக்க
முட்கம்பி வேலி போட்டு
முன்னுக்கு உட்காந்திருந்தது
உன் மாமியின் டாக்டர் பட்டம்
அது எமது முதல் ஜென்மம்
இப்போதும் ஒட்டிக் கொண்டே
தொடர்கிறது....
திருமணத்திற்கும் நட்புக்கும்
பெரிய வித்தியாசமில்லை
திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது
நட்பு
நிச்சயிக்கப்படும் இடம்
சொர்க்கமாகின்றது
அப்போதெல்லாம்
நீ
பிறருடன் நெருங்கிப் பழகினால்
என் நெஞ்சுக்கு வலிக்கும்
இப்போது முடியாது
அந்த உரிமையை
உன் மனைவிக்கு மாற்றியிருப்பாய்.
ஆனாலும்
சட்டியோடு ஒட்டிய
மீன்குழம்பாய்
இப்போதும் என்னுள்
ஒட்டிக் கொண்டே இருக்கிறது.
உனக்கும் அப்படியா?
நாம்
துள்ளித்திரிந்த
பள்ளிக் காலத்தை நினைத்தால்
காய்ந்த
சுள்ளிக் குச்சியிலும்
துளிர் தெரியும்
அவற்றை அள்ளி எடுத்து
அசைபோட்டுப் பார்க்கையில்
மனசுக்குள்
ஏஆர் றகுமானின் -மெல்
இசை கேட்கும்
உனக்கும் அப்படியா?
தரம் ஐந்து அப்போது அது
வகுப்பு ஐந்தென்றிருந்தது
இப்போது அது
மறக்க முடியாத மந்திர வார்த்தை
அது ஒரு ராஜ்யம்
குலேந்திரராசா அதன் ராஜா
'99 புள்ளி எடுத்தால் ஒரு அடி'
இது தான்
அந்த ராஜ்யத்தின் இராஜ வாக்கியம்
பூச்சிம் எடுத்தவன் கதி....
தண்டனை நிறைவேற்ற
எத்தனை பிரம்புகள் தவம் கிடக்கும்
உன் மோதிரம் நெளித்த
பிரம்புக் குச்சியை
நான்
முறைத்துப் பார்த்ததை
உன்னால் உணர முடிந்ததா?
அப்போது ரணமான நிகழ்வுகள் எல்லாம்
இப்போது ரசனையான நினைவுகளாய்
எப்படி மாறின?
ஆழ்பவன் ஒரு நாள் வீழ்வான்
என்பதை நம் உறவிலும்
நிரூபித்துக் காட்டியது 'முருகன்' சண்டை
ஆனால்....
முள்ளிவாய்க்காலில் மட்டும்;
எப்படி அது பொய்யானது?
சீச்சி மெய்தாய்
ஆப்போது ஆண்டவன் 'அண்ணன்' அல்லவா?
மீண்டும் வருவான்
நம் நட்புப் போல.....
அதெப்படி
நம் நட்பை எழுத மட்டும்
என் பேனாவுக்கு
இறக்கை முளைத்தது?
துரப்பிடித்திருந்த அதன் முனை
துலங்கியதெப்படி?
மரணம்
உன் தாத்தாவை மட்டுமல்ல
உன்னிடமிருந்து பிரித்தது
நம் நட்பையும் தான்.
அதன்பின் நம் நட்பென்ற முழுநிலவு
மூன்றாம் பிறையானது
பின் முழுதாய் மறைந்தது.
கிரகணத்தில் நிலவைக் கவ்விய பாம்பாய்
நம் உறவைக் கவ்வியது சிவானந்தா
என்றாலும்
காலம் விசித்திரமானது
சிவானந்தாவை எனக்கும் நண்பனாக்கியது
எனது 9ஏ ஓ.எல் முடிவு
சிவானந்தா நம் நட்பை விழுங்கினாலும்
அதனால் அதை ஜீரணிக்க முடியாததை
உன் திருமணத்தில் நிரூபித்தது
யுவனின் வரவு...
அவன் நமக்குத் தெரியாமலே
நமக்கு நண்பனாய் இருந்திருக்கிறான்
உனக்கும் எனக்குமாய்....
நீண்ட இடைவெளிக்குப் பின்
குறிஞ்சி பூத்தாற் போல்
12 வருடங்களுக்குப் பின்
மீண்டும் பூத்திருக்கிறது நம் நட்பு
அது தொடர....
குறிஞ்சியை
காகிதத்தில் செய்ய விரும்பவில்லை
அதற்கு மணமிருக்காது....
அதைக் களவாடும்
களைகளை கத்தரிக்க நினைக்கிறேன்
காயப்படுத்தும்
காற்றைக் கட்டி வைக்கப் பாக்கிறேன்
என் கல்லறை மட்டும்
அதன் மணம் பரவ....
அந்தப் 12 வருடங்கள்
பாழாய்ப் போனதாய் ஓர் உனர்வு
உன்னாலும் உணர ஒண்ணுதா?
உண்மையைச் சொல்கிறேன்
12 வருடங்களில் உன்னை
பல தடைவ நினைக்க வில்லை...
ஆனாலும் சில தடவைகள்
பலமாக நினைத்திருக்கிறேன்....
ஆம்...
உனக்குப் புரையேறிய
அந்த நிமிடங்களில் தான்....
அதிலும் பல தடவைகள்
ரத்தம் உறையும்
யுத்தச் செய்தியின் போது....
அப்போது உனக்கு
என்னை நினைக்க நேரம் இருந்திருக்காது
நீ..
தமிழனையும் தமிழையும் அல்லவா
நினைத்திருப்பாய்...
நட்பைப் பேசும் இடங்களில் எல்லாம்
என் நண்பர் கூட்டத்தில்
உன்னைப் பற்றிய கதை
முந்திக் கொள்வது
என்னைப் போன்றே
என் நண்பர்களுக்கும்
என்னில் எரிச்சலை ஊட்டியிருக்கும்
என்ன செய்வது?
அதைத் தடுக்'க முடியாது...
மீண்டும் தொடர்பு
மிக்க மகிழ்ச்சி
பாவம் பக்கத்தில் நின்றவர்கள்
நம் 12 வருட
நினைவுகளை
அவர்களுடன் அல்லவா மீட்டியிருந்தேன்
அப்படி ஒரு மகிழ்ச்சி
உனக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்
வர்ணிக்க வார்த்தையில்லாமல்
தவித்திருப்பாய்
வானத்தை எட்டிப் பிடித்ததாய்
உணர்ந்திருப்பாய்
இன்ப வலியை
இருதயம் அனுபவித்திருக்கும்
சொல்ல முடியாத ஏதோ ஒன்றால்
அவஸ்த்தைப் பட்டிருப்பாய்
அந்த அவஸ்த்தை
ஆனந்த எல்லையை உடைத்திருக்கும்
ஏனென்றால்
எனக்கும் அப்படித்தான் இருந்தது.
'பிரம்மன்'
உன்னோடு இல்லா விட்டாலும்
உன் நினைவுகளோடு
நான் பார்த்த முதல் திரைப்படம்
இக் கவிதை
முதல் மூச்சு விட
முட்டி மோதிய கருவறை
என்றாலும்
இப்போது நினைக்கையில்
உன்னிடம் உரிமைக் கோபத்தில்
ஒரு கேள்வி....
மட்டக்களப்பில்
உன் 1 வருட
அஞ்ஞாத வாசத்தில்
புதுக்குடியிருப்புமா உனக்குப்
புது – குடியிருப்பு?
என் தனிமையை எப்போதும்
உன்னுடனேயே
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
யாருமில்லா தனியறையில்.....
நதியோர மர நிழலில்....
ஊர் உறங்கும் பேரிருளில்
ஓற்றை மெழுகுவர்த்தியில்
நீயும் நானும் மட்டுமே
வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
பிரியும் நேரம் விரையும் போது
எத்தனை துன்பமோ
உன்னை எனதாக்கிக் கொண்டபோது
நான் அடைந்ததும் அத்தனை இன்பம்
எத்தனை இரவுகள்
ஒரே தலையணையில்
நீயும் நானும்.....
உன் பரிசத்தோடு
உறங்கிய இரவுகள்தான்
எத்தனை எத்தனை?
அறிவுடன் அடக்கமாயிருக்க
எங்கு கற்றுக்கொண்டாய்?
அதனாலோ என்னவோ
என்னை நீ ஈர்த்துக் கொண்டாய்
ஒவ்வொருநாளும்
உனக்கு நான்
பார்த்த முகம்
ஆனால்...
உன்னைப் புரட்டுகையில்
உன் ஒவ்வொரு பக்கமும்
எனக்கு நீ
காதலியின் காலை வணக்கம்
எமது உறவின் பிரிவை
கட்டியம் கூறியது நாள்காட்டி
கார்த்திகை எட்டாய்
நூலகருக்கெங்கே தெரியப்போகிறது
மீண்டும் அந்த
இறாக்கையிலிருந்து
நீயும் நானும்
ஒரே தலையணையில்
ஒன்றாயிருப்போம் என்பது.
உன்னுடனேயே
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
யாருமில்லா தனியறையில்.....
நதியோர மர நிழலில்....
ஊர் உறங்கும் பேரிருளில்
ஓற்றை மெழுகுவர்த்தியில்
நீயும் நானும் மட்டுமே
வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
பிரியும் நேரம் விரையும் போது
எத்தனை துன்பமோ
உன்னை எனதாக்கிக் கொண்டபோது
நான் அடைந்ததும் அத்தனை இன்பம்
எத்தனை இரவுகள்
ஒரே தலையணையில்
நீயும் நானும்.....
உன் பரிசத்தோடு
உறங்கிய இரவுகள்தான்
எத்தனை எத்தனை?
அறிவுடன் அடக்கமாயிருக்க
எங்கு கற்றுக்கொண்டாய்?
அதனாலோ என்னவோ
என்னை நீ ஈர்த்துக் கொண்டாய்
ஒவ்வொருநாளும்
உனக்கு நான்
பார்த்த முகம்
ஆனால்...
உன்னைப் புரட்டுகையில்
உன் ஒவ்வொரு பக்கமும்
எனக்கு நீ
காதலியின் காலை வணக்கம்
எமது உறவின் பிரிவை
கட்டியம் கூறியது நாள்காட்டி
கார்த்திகை எட்டாய்
நூலகருக்கெங்கே தெரியப்போகிறது
மீண்டும் அந்த
இறாக்கையிலிருந்து
நீயும் நானும்
ஒரே தலையணையில்
ஒன்றாயிருப்போம் என்பது.
புன்னகை புகை பூக்க
விரைகிறது புகைவண்டி
பாவம் பக்கத்துவீடுகள்...
பரவாயில்லை காட்டுமரங்கள்...
தலைவருடும் காற்றில்
கரைந்தே தொலைகிறது
காணிக்கையாக்கிய இரவுகள்.
எதிரே இன்பராசா
இடப்பக்கம் இன்னுமிருவர்
மொத்தமாய் மூவரையும்
முழுதாய் விழுங்கிய வெற்றிக் களிப்பில்
இரவுக்கு வயது பத்துமணி
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காரிருளின் கைவரிசை
மனதுக்கெட்டிய தூரம்வரை
மாய்த்திருக்கும் மனப்பதிவுகளை
கோத்தெடுக்கும் முயர்ச்சியில் நான்.....
ஏங்கிருந்தோ ஓர் உந்துருளி....
எங்கே போய் சேருமென்ற
வினா முடிவதற்குள்....
முடிந்து போகிறது
என் பார்வைக் கோணம்
தானொருவன் இருப்பதை
தலையசைப்பு மட்டுமின்றி
சத்தமிட்டும் சுட்டிக் கொண்டிருக்கும்
மின்விசிறியும் என்னையும் தவிர
அனைவருமே
இரவுக் கள்ளனால்
கொள்ளையிடப்பட்டிருந்தனர்.
மன்னம்பிட்டி
மறையும்போது
நள்ளிரவுக்கின்னும்
நாற்பது நிமிடங்கள்
சில்லென்ற குளிர்காற்று
ஜன்னலூடு சொல்லியது
கார்காலக் கதவுகள்
திறந்தே கிடப்பதை
என்னுடன் விழித்திருந்த விழிகள்
முணகிக் கொண்டன
போதும் கவிதை
போர்த்திக்கொண்டு தூங்கென
பாவம் மின்விசிறி
தனிமையில் தவித்திருக்கும்
விரைகிறது புகைவண்டி
பாவம் பக்கத்துவீடுகள்...
பரவாயில்லை காட்டுமரங்கள்...
தலைவருடும் காற்றில்
கரைந்தே தொலைகிறது
காணிக்கையாக்கிய இரவுகள்.
எதிரே இன்பராசா
இடப்பக்கம் இன்னுமிருவர்
மொத்தமாய் மூவரையும்
முழுதாய் விழுங்கிய வெற்றிக் களிப்பில்
இரவுக்கு வயது பத்துமணி
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காரிருளின் கைவரிசை
மனதுக்கெட்டிய தூரம்வரை
மாய்த்திருக்கும் மனப்பதிவுகளை
கோத்தெடுக்கும் முயர்ச்சியில் நான்.....
ஏங்கிருந்தோ ஓர் உந்துருளி....
எங்கே போய் சேருமென்ற
வினா முடிவதற்குள்....
முடிந்து போகிறது
என் பார்வைக் கோணம்
தானொருவன் இருப்பதை
தலையசைப்பு மட்டுமின்றி
சத்தமிட்டும் சுட்டிக் கொண்டிருக்கும்
மின்விசிறியும் என்னையும் தவிர
அனைவருமே
இரவுக் கள்ளனால்
கொள்ளையிடப்பட்டிருந்தனர்.
மன்னம்பிட்டி
மறையும்போது
நள்ளிரவுக்கின்னும்
நாற்பது நிமிடங்கள்
சில்லென்ற குளிர்காற்று
ஜன்னலூடு சொல்லியது
கார்காலக் கதவுகள்
திறந்தே கிடப்பதை
என்னுடன் விழித்திருந்த விழிகள்
முணகிக் கொண்டன
போதும் கவிதை
போர்த்திக்கொண்டு தூங்கென
பாவம் மின்விசிறி
தனிமையில் தவித்திருக்கும்
முதன் முதலாய் இன்று
இருதயம் கனக்கிறது
நீ என்னைக் கடக்கையிலே
இரசாயனங்கள் என்னுள்
இரகசியம் பேசிக்கொள்கின்றன...
உன்னவள் இவள்தான் என்று
பழகப் பழகப் பாலும் புளிக்குமாம்
யாரிங்கு பொய் சொன்னது ?- உன்னைக்
கண்ட பின் தானே
பழஞ்சோறு சுடுகின்ற
அதிசயம் நடக்கின்றது!
ஆயிரம் குயில்களின்
சேர்க்கையை உந்தன்
குரல் நாண்கள் பகர்கின்றன - அந்த
அதிசயக் கங்கையின்
அசைவு உன் கூந்தலில்
அடக்கமாய் கிடக்கின்றதே!
மொத்தமாய் நானும்
பித்தாகிப் போகிறேன் - நீயுன்
கட்டிய கணவனோடொட்டியே
போகயிலே.....
இருதயம் கனக்கிறது
நீ என்னைக் கடக்கையிலே
இரசாயனங்கள் என்னுள்
இரகசியம் பேசிக்கொள்கின்றன...
உன்னவள் இவள்தான் என்று
பழகப் பழகப் பாலும் புளிக்குமாம்
யாரிங்கு பொய் சொன்னது ?- உன்னைக்
கண்ட பின் தானே
பழஞ்சோறு சுடுகின்ற
அதிசயம் நடக்கின்றது!
ஆயிரம் குயில்களின்
சேர்க்கையை உந்தன்
குரல் நாண்கள் பகர்கின்றன - அந்த
அதிசயக் கங்கையின்
அசைவு உன் கூந்தலில்
அடக்கமாய் கிடக்கின்றதே!
மொத்தமாய் நானும்
பித்தாகிப் போகிறேன் - நீயுன்
கட்டிய கணவனோடொட்டியே
போகயிலே.....


