கவிநயம்

Mathan | 9:26 PM | 0 comments

மாருதம் தந்த நல் இலக்கியமே
போருடன் வாழ்வையும் இயம்பிடுமே
காதலும் கற்பையும் காட்டிடுமே
சாதலில் காப்பியம் நாட்டிடுதே!

எண்ணுவதெல்லாம் எழுத்துருவில்
பண்ணுடன் பண்ணுவோம் பாவடிவில்
மண்ணுடன் வாசனை சேர்திடவே
நன்னயம் போசனை ஆக்கிடுவோம்

சேற்றில் முளைத்தசெந் தாமரைபோல்
காற்றினில் கற்பனை ஏற்றிடுவோம்
நூற்றில் ஒரு கவி என்றிடவே – கனிச்
சாற்றின் சுவையுற வார்த்திடுவோம்

நாட்டின் நடப்புகள் காட்டிடவே
ஏட்டில் எழுத்துரு வாக்கிடுவோம்
பாட்டில் பகுப்பறிவாளன் தனை
வீட்டில் இருந்து விடையாக்கிடுவோம்

மானுடம் கூறி மகிழ்ந்திடுவோம்
தானும் அதுவென வாழ்ந்திடுவோம்
மங்கல வார்த்தையில் மொழிந்திடுவோம்
இங்கிதமாய் அறிவூட்டிடுவோம்.

Category: ,