புரிந்துணர்வு
அவன்மேலோ அல்லது
அவள்மேலோ உனக்கு
புரிந்துணர்வு வந்தால்
பிரிவுகள் பாடையேறும்.
“ம்” கூட இதிகாசம் எழுதும்
“உம்” சொன்னாலும்
சொல்லா விட்டாலும்
உண்மை விளங்கும்
மௌனம் கூட உனக்கு
பதில் சொல்லும்
இடைவெளிகள்
இடைநிறுத்தம் செய்யூம்
மாற்றுக் கருத்துக்கள்
மன்னிப்பு மனுக்கோரும்
புரிதலால் அல்லவா
கோடையெனும் கொடிய
ஊடலின் பின்னரும்
பூமியும் வானும்
மழைக் கரத்தால்
கைகோர்த்துக் கொள்கின்றன.
புரிதலில் அல்லவா
பூக்களும் வண்டும்
Category: கவிதை